கொழும்பு பேராயர் மெல்கம் கர்தினால் ரஞ்சித் ஆண்டகை இன்று புதன்கிழமை ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவை உயர்ஸ்தானிகர் மிச்சேல் பச்லெட்டை சந்தித்துப் பேசினார்.
ஜெனீவாவில் நடைபெற்று வரும் ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் 49 ஆவது கூட்டத் தொடரில் இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளது.
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் இலங்கை அரசின் நீதி விசாரணை மீதான நம்பிக்கை தகர்ந்துவிட்டதாக தெரிவித்துள்ள பேராயர் மல்கம் கர்தினால் ரஞ்சித், நீதி கோரி சா்வதேசத்தை நாடவுள்ளதாகத் தெரிவித்திருந்தார்.
இதற்காக வத்திக்கான் அனுமதியை நாடிய அவா், வத்திக்கான் சென்று பாப்பரசர் பிரான்சிஸை சந்தித்துப் பேசிய பின்னர் ஜெனீவா சென்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.